புகையிரத தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஆரம்பம்!

புகையிரத தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன் ஊடகப் பேச்சாளரும், புகையிரதப் போக்குவரத்து அத்தியட்சகருமான அசங்க சமரசிங்க தெரிவிக்கையில்,

ஒரு புகையிரதத்தைத் தவிர ஏனைய அனைத்துப் புகையிரதங்களையும் வழமைபோன்று சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

தற்போதைய புகையிரத பொது முகாமையாளரை பதவியிலிருந்து நீக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. 

16.09.2026 அன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 48 மணிநேரத்திற்கு இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்ட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,

நேற்றைய தொழிற்சங்க போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னரே பல புகையிரத சேவைகள் முடங்கியதாக தெரிவித்தார். 

இதனால் பல பணியாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியதாகவும் அவர் கூறினார். 

எனவே தமது கோரிக்கைகள் குறித்து உடன் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects