கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் யானை – மனித மோதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 21 ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி,
இந்த ஆண்டில் இதுவரை ஏற்பட்ட யானை- மனித மோதல்களினால் மொத்தம் 207 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 88 பேர் உயிரழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாகக் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










