கடந்த நாட்களில் தினசரி சுமார் 1,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகிய போதிலும், தற்போது அந்த எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது தினசரி 200 முதல் 300 வரையிலான டெங்கு நோயாளர்களே பதிவாகி வருவதாக அதன் பதில் பணிப்பாளர் மருத்துவர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 90,625 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 65 மரணங்களும் சம்பவித்துள்ளன.
அத்துடன், இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த மாதத்திலேயே பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 29,973 எனவும் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










