மட்டக்களப்பு புனித மிக்கேல் தேசிய பாடசாலையில் 1995 ஆம் ஆண்டு உயர்தரத்தில் கல்வி கற்ற பழைய மாணவர்கள், தங்களது ஐம்பதாவது அகவை நிறைவை முன்னிட்டு, பாடசாலையில் நவீன கூடாரம் ஒன்றை அமைத்துள்ளனர்.
பாடசாலை முடிவடைந்த பின்னர் மாணவர்கள் பாதுகாப்பாகக் காத்திருக்கக்கூடிய நவீன கூடாரம் ஒன்றை சுமார் 550,000 ரூபாய் செலவில் நிர்மாணித்து 27.07.2026 அன்று பாடசாலை சமூகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.
மேலும், பாடசாலையின் கூடைப்பந்தாட்ட அணிக்கான விளையாட்டு அங்கிகள் (Jerseys) கொள்வனவு செய்வதற்காக 75,000 ரூபாய் நன்கொடையும் பழைய மாணவர்களால் வழங்கப்பட்டது.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







